மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலரி மாளிகையில் இன்று (16) முற்பகல் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.