Our Feeds


Friday, October 15, 2021

Anonymous

ஆப்கானிஸ்தானில் இன்றும் ஷீயா மதப்பிரிவு பள்ளிவாயலில் குண்டுவெடிப்பு

 



ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் இன்று (15) வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மதப்பிரிவு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.


45 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அங்குள்ள இமான் பர்கா மசூதியில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. அங்கிருந்து வரும் படங்களில் சிதைந்த ஜன்னல் பாகங்கள் மற்றும் உடல்கள் தரையில் கிடப்பதை பார்க்க முடிகிறது.

குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இது ஒரு தற்கொலை குண்டு தாக்குதலார இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காயமடைந்த வழிபாட்டாளர்கள் மிர்வைஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »