கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘மோல்னுபிரேவிர்’ என்ற மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.
தேவையான பரிந்துரைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மருத்துவ நிறுவனமான ‘மெர்க்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் இந்த மாத்திரையின் பயன்பாட்டில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கவனம் செலுத்துகின்றன.
இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களைப் பெற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.