Our Feeds


Thursday, October 21, 2021

SHAHNI RAMEES

பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் சாரதிகளுக்கான அறிவிப்பு

 

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர

வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இன்று (21) முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் அதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் என்றும் பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும் இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »