இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கிய பந்துல வர்ணபுர காலமானார்.
68 வயதான பந்துல வர்ணபுர கொழும்பிலுள்ள தனியார் வைத்தயாசலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1982 பெப்ரவரி 17 ஆம் திகதி கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் ஆரம்பமான இங்கிலாந்துடனான போட்டி மூலம் முதல் தடவையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி விளையாடியது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.