Our Feeds


Sunday, October 10, 2021

Anonymous

இந்தியாவில் புதிய விமான நிலைய திறப்பு விழாவுக்கு கோட்டா உள்ளிட்ட குழு பயணம்?

 



இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125 பேர் கொண்ட குழுவினர் செல்ல உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த விமான நிலையத்தை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த பயணம் தொடர்பில் தற்போது வரை நிகழ்ச்சி நிரல் ஒன்றும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பேச்சாளர் கிங்ஸி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »