மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துவந்த நிலையிலேயே, மின்சக்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.