ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதமிருக்கின்ற நிலையில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. அதாவது எஞ்சியிருக்கின்ற இரு போட்டிகளும் பாகிஸ்தான் அணிக்கு இலகுவான போட்டிகளாகவே அமைந்திருக்கின்றன. நமீபியா, ஸ்கொட்லாந்து அணிகளுடனான போட்டியில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும்.