Our Feeds


Friday, October 1, 2021

Anonymous

இலங்கைக்கு அண்மையாக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை - நாளையும் நாளை மறுதினமும் நாட்டில் பல இடங்களில் மழை

 



இலங்கைக்கு அண்மையாக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ளதால் நாளையும் நாளை மறுதினமும் (ஒக்டோபர் 1, 2ஆம் திகதிகளில்) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »