நாடு மீண்டும் திறக்கப்பட்டாலும், மக்கள் தொடர்ந்து ஐந்து அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பது அவசியமாகும் என்று, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்திர தெரிவித்தார்.
இல்லையென்றால், எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலைகள் மீண்டும் ஏற்படலாம் என்றும் கூறினார்.
மேலும், தடுப்பூசி பெறாதவர்கள், அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, தடுப்பூசியைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.