Our Feeds


Saturday, October 30, 2021

SHAHNI RAMEES

A30 வைரஸ் புறழ்வு தொடர்பில் இலங்கை மிகவும் எச்சரிக்கை!

 


உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தும் A30 என்ற புதிய வகை கொவிட் வைரஸ்

ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த A30 வைரஸ் புறழ்வு தொடர்பில் இலங்கை மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

இந்த வைரஸ் புறழ்வானது, தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாது என கண்டறியப்பட்டுள்ளது.

பைசர், அஸ்ட்ராசேனிகா உள்ளிட்ட அனைத்து வகை தடுப்பூசிகளுக்கும் இந்த வைரஸ் புறழ்வு கட்டுப்படாது என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த வைரஸ், பரவும் பட்சத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மக்கள் பொறுப்பின்றி நடந்துக்கொண்டால், எதிர்வரும் 4 வாரங்களில் அபாயகரமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன குறிப்பிடுகின்றார்.

திருமண நிகழ்வுகள், மரண வீடுகளில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »