தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நேற்று (01) தளர்த்தப்பட்ட நிலையில், சுகாதார வழிகாட்டல்களை மீறி ஆசன எண்ணிக்கையை விட அதிகளவான பயணிகளை ஏற்றிச்சென்ற 9 தனியார் பேருந்துகளை மடக்கிப் பிடித்துள்ளதாக மேல்மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்தார்.
களுத்துறை, அலுத்கம, மதுகம பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி வருகைத்தந்த தனியார் பேருந்துகளே இவ்வாறு சுகாதார விதிமுறைகளை மீறி பயணித்து இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.