Our Feeds


Sunday, October 10, 2021

Anonymous

வைத்தியர் ஜயருவனிடம் 7 மணி நேரம் சிஐடி விசாரணை: அவசியம் ஏற்படின் மீண்டும் அழைப்பதாக அறிவிப்பு!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று 9 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு சிஐடியில் ஆஜராகிய வைத்தியர் ஜயருவன் பண்டாரவிடம் பிற்பகல் 3.15 மணி வரை விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடி தகவல்கள் தெரிவித்தன.


இந்நிலையில் விசேட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படின் மீள விசாரணைக்கு அழைப்பதாக கூறி வைத்தியர் ஜயருவன் பண்டார விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித்த நடத்திய நேர்காணலில், வைத்தியர் ஜயருவன் பண்டார வெளிப்படுத்திய விடயங்களை மையப்படுத்தி, தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விடயங்களை அறிந்து கொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த விடயம் தொடர்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்திருந்த முறைப்பாட்டுக்கமைய வைத்தியர் ஜயருவன் பண்டார விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »