குறித்த பிரததேசத்தில் நேற்று (18) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மதவாக்குளம், தெஹிவளை, துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22, 26, 37, 67 ஆகிய வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் குறித்த வனப்பகுதியின் பாறைப்பகுதியில் இரண்டு அடி விட்டமும், 12 அடி நீளமும் கொண்ட பாரிய குழியொன்றை தோண்டியுள்ளதாகவும், அந்த பாறைக் குழிக்குள் உள்ளே இறங்குவதற்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏணி ஒன்றையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்த குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், புதையல் அகழ்வுக்காக சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.