தாயொருவர், தனது 3 பிள்ளைகளுக்கும் விஷத்தை கொடுத்துள்ளதுடன், அவரும் விஷமருந்திய சம்பமொன்று ஹாலிஎல-வேவல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த நால்வரும் பதுளை பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
35 வயது தாய் தனது 6, 4, மற்றும் 3 வயது குழந்தைகளே இவ்வாறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது குடும்ப வறுமை காரணமாகவே தனது பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து, தானும் பருகியதாக தாய் தெரிவித்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.