Our Feeds


Wednesday, October 20, 2021

Anonymous

தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த 3 சிறுவர்களில் 7 வயது சிறுவன் பரிதாபமாக பலி

 


 

சுமணசிறி குணதிலக


பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.


இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்களது 27 வயதுடைய தாய் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டவாறு வந்துள்ளார்.

இதன்போது தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளதுடன், 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

ஏனைய சிறுவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »