நாட்டில் மீண்டும் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
வெள்ளை சீனி கிலோ விலை 122 ரூபாவை கடந்துள்ள நிலையில், சில இடங்களில் 135 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவப்பு சீனியின் விலையும் 125 ரூபா என்ற கட்டுப்பாட்டு விலையை கடந்து 138 ரூபா வரை விற்பனையாவதாக அறியமுடிகிறது.
இதேவேளை, கீரி சம்பா அரிசி விலை மீண்டும் 200 ரூபாவை கடந்திருப்பதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.