Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

கருப்புப் பட்டி அணிந்து 20 க்கு 20 முதல் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணி

 



இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி இன்று (18) தமது முதலாவது போட்டியில் விளையாடவுள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியத்தின், துபாயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணி, நமீபிய அணியை எதிர்த்தாடவுள்ளது.

இன்று காலை காலமான, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது அணித்தலைவர் பந்துல வர்ணபுரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றைய போட்டியில் இலங்கை அணிவீரர்கள் கையில் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »