Our Feeds


Thursday, October 28, 2021

Anonymous

உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் Prof. நீலிகா மலவிகே உட்பட இலங்கையில் 24 பேர் உள்ளடக்கம் - அமெரிக்க பல்கலைக்கழகம் அறிக்கை

 



எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர தடுப்பு காப்பு சேவை சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில், உலகின் முன்னணி பல்கலைக்கழகமொன்று விடுத்த புதிய அறிக்கையொன்றில் எமது நாட்டு நிபுணர்களின் சிறப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் ஸ்டென்ஃபோர்ட் பல்கலைக்கழகம் விடுத்த இந்த அறிக்கைக்கு அமைய, உலகின் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்ளும் 2 வீத விஞ்ஞானிகளில் இலங்கையைச் சேர்ந்த 24 பேர் அடங்குகின்றனர்.

இவர்களில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மலவிகே, பேராசிரியர் மெத்திகா வித்தானகே, கலாநிதி அனுஷ்கா யூ ராஜபக்ஸ ஆகியோரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »