Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

தன்னைக் கடித்த நாக பாம்பை பிடித்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற 15 வயது சிறுவன்: யாழில் சம்பவம்!

 


யாழ்.சாவகச்சேரியில் நாகபாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன் ஒருவன் தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில், சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 15 வயதான குறித்த சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த சிறுவனும்  நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன்போதே சிறுவனை கடித்தது நாக பாம்பு என தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறான்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »