Our Feeds


Sunday, October 17, 2021

SHAHNI RAMEES

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன


 முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்களை முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று(16) கைப்பற்றியுள்ளனர்.


கிணற்றை சுத்தம் செய்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடியவையென தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இவற்றை செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »