பசுமை விவசாயத்துக்கான 14 பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு வௌியிடப்பட்டுள்ளது.
14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக லலித் செனவிரத்ன, கசுன் தாரக அமல், மாலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, கலாநிதி பி.கே.ஜி காவந்திஸ்ஸ, சமந்த பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்தூனு, என்.எம் கலீட், ஷம்மி கிரிண்தே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கானம்கே மற்றும் நிஷான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.