Our Feeds


Monday, October 18, 2021

Anonymous

13 வயதான சிறுமியை ஒன்றரை வருடங்களாக வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது!

 



(மயூரன்)


13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இதேளை, சந்தேக நபரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பில் எடுக்கப்பட்ட சில காணொளியை வெளியிட முயற்சித்த சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவிலில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த ஒன்றரை வருடங்களாக தன்னை பல தடவைகள் வன்புணர்ந்ததாக  சிறுமி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரின் கீழ் பணியாற்றும் சிலர் சிறுமியின் ஒளிப்படங்களை வைத்திருந்தமை தொடர்பில் கண்டறிந்தனர்.

அந்த ஒளிப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடலாம் என்ற அடிப்படையில் அவற்றை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »