Our Feeds


Wednesday, October 20, 2021

SHAHNI RAMEES

விரைவில் 12 மணிநேர மின்வெட்டு?


 நாட்டில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, 200 மெகாவோட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதன்போது தெரிவித்தார்.

நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 சதவீத அளவு இழக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்படியானால், நாடு கண்டிப்பாக 12 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »