Our Feeds


Thursday, October 7, 2021

Anonymous

ரிஷாத் போத்தலில் சிறுநீர் கழிக்கிறார் - 05 மணிக்கு சிறை அறையை மூடுகிறார்கள் - பாராளுமன்றில் கிரியல்ல MP தெரிவிப்பு - VIDEO

 



(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் அவர் இரவு நேரத்தில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சி பேதங்களுக்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்க்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகராகிய உங்களுக்கு உள்ளது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சிறை அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் அவர் இரவு நேரங்கயில் போத்தலில் சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தின் பிரகாரம் இரவு நேரத்தில் இரண்டு தடவைகள் மத வழிபாட்டில் (தொழுகையில்) ஈடுபடவேண்டும். ஆளுங்கட்சி எம்.பிகளும் சிறைச்சாலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடுகளில் இருந்து உணவுகள் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி ரிஷாதின் மைதுனரை கைது செய்து சிறையில் பல வாரங்கள் அடைத்து வைத்தார்கள். ஆனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணுக்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »