Our Feeds


Sunday, September 19, 2021

Anonymous

கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் - பிரதமர் நாட்டுக்கு திரும்பியதும் அமைச்சர் லொஹானுக்கு நடவடிக்கை - SLPP



வெலிகட மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளுக்குள் சென்று, கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தனது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பொறுப்பை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த தொடர்பில் தீர்மானமொன்றை எட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.


உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாட்டிற்கு திரும்பிய பின்னர், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பிரதம செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நாட்டிற்கு வருகைத் தந்த பின்னர், கட்சியின் மத்திய செயற்குழு கூடி, இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »