Our Feeds


Wednesday, September 22, 2021

Anonymous

SHORT_BREAKING: அல்லாஹ்வை ஞானசார தேரர் இழிவுபடுத்தும் போது முஸ்லிம் MPக்கள் வாய்மூடியிருக்கிறார்கள் - இவர்கள் ஊருக்கு வந்தால் செருப்பால் அடியுங்கள் - சாணக்கியன் MP



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமற்ற ஊடகப்பேச்சாளராக ஞானசார தேரர் விளங்குவதாகவும் சாணக்கியன் எம்.பி இதன்போது குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட சாணக்கியன் எம்.பி “இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டதாக சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

“அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தான் என ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன். இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? 

நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கும் நிலையில் அல்லாஹ்வை முதன்மை குற்றவாளியென ஞானசார தேரர் கூறுகிறார் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம் எம்.பி க்கள் ஊருக்குள் வந்தால் செருப்பால் அடியுங்கள். 

எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?” அஸாத் சாலி சிறையிலிருக்கிறார். ரிஷாத் சிறையிலிருக்கிறார் ஆனால் ஞானசார தேரர் வெளியிலிருக்கிறார். இது என்ன சட்டம்? எனவும் சாணக்கியன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

இதே வேலை சாணக்கியன் எம்.பி பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு பின்னால் இருந்த பேருவலையிலிருந்து தேசிய லிஸ்டில் பாராளுமன்றம் வந்த முஸ்லிம் எம்.பி ஒருவர் அவருடைய பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்திய நிலையில் “ஹாஜியார் வாயை மூடுங்கள்” இன்று தான் நீங்கள் பாராளுமன்றத்தில் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். என சாணக்கியன் பதிலளித்தார். இருப்பினும் குறித்த எம்.பி இடையூறு செய்வதை நிறுத்தவில்லை. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »