Our Feeds


Tuesday, September 28, 2021

Anonymous

PHOTOS: முஸ்லிம் பிரச்சினைகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் எடுத்துரைத்தார் ரவூப் ஹக்கீம்




ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.  


இலங்கை முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளமை. மற்றும் பௌத்த மதகுருமாரின் செயல்பாடுகள் தொடர்பில் தூதுக்குழுவிடம் எடுத்துரைத்ததாக ஊடகங்களிடம் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சழுகையை இடை நிறுத்துவதா தொடர்வதா என்பதை ஐரோப்பிய ஒன்றியமே தீர்மானிக்கும் என இதன் போது ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »