கிளிநொச்சியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அலுவலகத்திற்கு உள்ளே எவரையும் உள்ளே செல்ல விடாமல் பொலிஸார் தடுப்பதாகவும் ,கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க உள்ளே சென்ற போது பொலிசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
குறித்த பொலீசாரிடம் ”ஏன் இவ்விடத்தில் நிற்கிறீர்கள்”? அலுவலகத்திற்கு வருவோருக்கு தடையை ஏற்படுத்துகிறீர்கள் என்று சிறிதரன் எம் பி பொலிஸாரிடம் கேட்டதற்கு பதிலளித்த பொலிஸார், இது மேலிடத்து உத்தரவு என்று பதில் கூறியுள்ளதாக அறியமுடிந்தது.