தமக்கு எதிராக கட்சியினால் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் எந்தவொரு தவறான கருத்தினையும் முன்வைக்கவில்லை. கட்சியின் தலைவர் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தமக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
பாதுக்க காவல்துறை பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்வதற்கு அமைச்சர்களான சரத் வீரசேகர மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் நடவடிக்கை எடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு குறித்த அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்தநிலையில், ஜகத் குமாரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.