கொவிட் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக மலட்டுத்தன்மை ஏற்படுவதாக பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என விசேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போலியான செய்திகளை பரப்புவது சமூக விரோதமான செயல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.