Our Feeds


Saturday, September 18, 2021

Anonymous

JUST_IN: ரிசாத் பதியுதீனின் சட்டத்தரணிக்கு ISIS உடன் தொடர்பு? சிஜடியிடம் ஆதாரமுண்டு என்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த



பயங்கரவாதி சஹ்ரானுக்கு பணம் கொடுத்தவர்கள் மற்றும்  ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் குரலெழுப்பப்படுகின்றது என விவசாய அமைச்சரும் ஆளும் பொதுஜன பெரமுண அரசாங்கத்தின் முக்கியஸ்தருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.


அமைச்சர் றிசாத் பதியுதீனின் சட்டத்தரணிக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் அது தொடர்பான ஆதாரங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.  


சமூக வலைதள இணையத்தள ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »