Our Feeds


Wednesday, September 22, 2021

SHAHNI RAMEES

முன்னால் ஜனாதிபதி மைத்ரியுடன் விமல் அணி நேற்றிரவு தீவிர பேச்சு: - கொழும்பு அரசியலில் பரபரப்பு


 ஆளுங்கட்சி பங்காளிக்கட்சி தலைவர்கள் இன்று (21) இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சந்திப்பானது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கலந்துரையால் தொடர்பில் தங்களது கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் இடையே இடம்பெற்றுள்ள பேச்சுவார்த்தையானது, எதிர்வரும் நாட்களில் கொழும்பு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »