இலங்கையில் மீண்டும் நிலகடுக்கம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக பதுளை, கண்டி, மடுல்சீமை, லுணுகம்வெஹர, அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுக்கமைய எதிர்வரும் நாட்களிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்