தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தவிற்கு அனுப்பியுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது குறித்து உரிய நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.