Our Feeds


Wednesday, September 29, 2021

Anonymous

கொரோனா பரவல் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்



கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.


அமெரிக்க ஆய்வொன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே கொரோனா பரவலை நிறைவுக்கு கொண்டுவர முடியுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அனைவரினதும் கடமையாகும், எனவே தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரும் சிந்தித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »