கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எதிர்த்திருக்கும் விமல் அணியினரை சந்திக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அளித்த சந்தர்ப்பத்தை இரத்து செய்துள்ளார்.
எனினும் நாளை வியாழக்கிழமை இந்த சந்திப்பு மாலை 04 மணிக்கு அலரிமாளிகையில் நடத்தப்படும் என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பு இன்று நண்பகலில் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.