Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.



காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கப்படவுள்ளதாக என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »