Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

பஸ் சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் போக்குவரத்து சபையின் முக்கிய அறிவிப்பு



சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நாளையிலிருந்து (01) போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5500 சேவையில் ஈடுபடுமென போக்குவரத்துச் சபையின் தலைவா் சிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளாா்.


போக்குவரத்துச் சபையின் சாரதிகள், பஸ் நடத்துனா்கள் உள்ளிட்ட சகல பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சகல பணியாளா்களையும் சேவைக்கு அழைக்குமாறு அனைத்து டிப்போ அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னா் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவதற்காக போக்குவரத்துச் சபையின் பிரதான காரியாலயத்தில் இன்று (30) இடம்பெற்ற செய்தியாளா் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்காவிட்டாலும் மாகாணங்களுக்குள் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »