நாளை (01) அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் சேவைகளை இரு வாரங்களுக்கு மாகாணங்களுக்குள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடளாவிய ரீதியாக புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.