கொரோனா தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன அனுமதி பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் மீன்டும் நாளை (01) முதல் ஆரம்பமாகுமென கிழக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடேர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட கடிதத்துக்கு அமைவாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகான அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் சேவை பெறுனரின் நலன் கருதி கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.