ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்பது தொடர்பான யோசனைகள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி அனைத்து அரச சேவையாளர்களையும் கடமைக்கு அழைப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போக்குவரத்தின் போது 50 வீதமான பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.