வவுனியாவில் நிர்ணய விலைக்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை சீமேந்து மூடைகள் வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
வவுனியா சூசைப்பிள்ளையார் குளம் வீதியில் இன்று காலை (18) லொறி ஒன்றில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த சீமேந்து மூடைகள் தொடர்பாக வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சீமேந்து மூடைகளில் அச்சிடப்பட்டிருந்த விலைக்கு அதிகமாக அவை விற்பனை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக குறித்த முகவர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.