Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றம்?



நாளை (01), சில கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படவுள்ள நிலையில், அமைச்சரவையிலும்  பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கமைய, முழுமையான அமைச்சரவை மாற்றமாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் வரவு - செலவுத் திட்டத்துக்;குப் பின்னரே அமைச்சரவையில் மாற்றம் நிகழ்வது வழக்கம். இருப்பினும், இம்முறை அதற்கு முன்னதாகவே அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்பட இருப்பதாக தெரியவருகிறது.

இதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் விருப்பம் வெளியிடவில்லை என்றாலும், தற்போது அவர் பூரண விருப்பம் வெளியிட்டிருப்பதாக, அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »