பொருளாதார மையங்களில் காய்கறிகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் நியாயமற்ற வகையில் அதிக விலையில் காய்கறிகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்தார்.
அத்தகைய வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 0112 369 139 அல்லது தொலைநகல் 0112 369 142 க்கு தெரிவிக்கலாம் என்றும் கொழும்பு மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ரத்மலானை, நாரஹேன்பிட்ட மற்றும் போகுந்தரா பொருளாதார மையங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.