Our Feeds


Wednesday, September 22, 2021

Anonymous

சாராயக் கடைகள் திறக்கப்பட்டமை அரசின் சிறந்த தீர்மானம் - இராஜாங்க அமைச்சர்



ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டதன் காரணமாக, சட்டவிரோதமாக சுமார் 3500 முதல் 4000 ரூபா வரையில் சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.


அத்தோடு, மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் கசிப்பு குடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

மதுபான கடைகள் திறக்கப்பட்டமையானது அரசாங்கத்தின் சிறந்த தீர்மானம் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் வருமானம் ஈட்டுவதற்கு சில வழிகளே காணப்படுவதாகவும், எனவே நாடு மூடப்படும்போது இவற்றையும் மூடி வைத்தால் அரசுக்கு வருமானம் கிடைக்காமல் போகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »