Our Feeds


Thursday, September 30, 2021

Anonymous

அரிசி தொடர்பான மற்றுமொரு முக்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியானது.



அரிசிக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று (29) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவிக்கின்றது.


இதேவேளை, அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்ட பின்னணியில், அரிசிக்கான விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயித்தமை பிரச்சினைக்குரிய விடயம் என இராஜாங்க அமைச்சர் ரோஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார்.


பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களினால் வெளியிடப்பட்ட விலைக்கு, புறக்கோட்டை சந்தையில் நேற்று அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அரிசிக்கான நிர்ணய விலையிலிருந்து அரசாங்கம் விலக கூடாது என சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »