Our Feeds


Monday, September 20, 2021

SHAHNI RAMEES

பெற்றோரை கடுமையாக தாக்கிய பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர்!

 


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை - வெலிகம பிரதேச சபை உறுப்பினராக பிரசாத் மிலிந்த காணி பிரச்சினை காரணமாக அவரது பெற்றோரை கொடூரமாக தாக்கியுள்ளதாக அவரின் இளைய சகோதரன் நிரேஷ் கிஷாந்த தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பெற்றோர் மாத்தறை பொது மருத்துவமனை மற்றும் அஹங்கம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், நிரேஷின் குழந்தை இந்தச் சம்பவத்தை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், இதுவரை நீதி வழங்கப்படவில்லை என அவரது இளைய சகோதரர் நிரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »