Our Feeds


Friday, September 24, 2021

SHAHNI RAMEES

தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுமாறு கோரிக்கை




கொவிட்-19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதோருக்கு மீண்டும் தொற்று உறுதியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தமது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். 

சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாத இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டோரில் 65 முதல் 70 சதவீதமானோருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாவதாக புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதால் மரணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியுமே தவிர, தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே, தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாலும் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »