Our Feeds


Sunday, September 26, 2021

Anonymous

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கும் சட்டம் - சுகாதார அமைச்சர் வழங்கிய பதில்



கொரோனா நோய் எதிர்ப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்குகின்றமை குறித்து, எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.


பெரும்பாலானோர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ள போதிலும், சிலர் அதனை புறக்கணித்து வருவதாக அவர் கூறுகின்றார்.


தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றமை தொடர்பில் சட்ட வரைவொன்று தயாரிப்பதற்கான தேவை ஏற்படும் பட்சத்தில், அது குறித்து சுகாதார தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கண்டி தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தை திறக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


100 சாதாரண சிகிச்சை கட்டில்களும், 10 அவசர சிகிச்சை கட்டில்களும் அடங்களாக இந்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »